குறுக்கே என்னை கண்டால்,
அழைத்து விடாதீர்கள்...!
ஒரு வேளை நாம் எதிர்பட்டுக்
கொண்டால், ஒரு புன்னகையில்
மென்மையாக கடந்துவிடுங்கள்..
அழுத்தமாக சொல்கிறேன்,
தெரிந்தோ, தெரியாமலோ
"எப்படி இருக்க?" என்று மட்டும்
கேட்டு விடாதீர்கள்..
அணை உடைய ஒரு அதிர்வு
போதுமல்லவா ?
குறுக்கே என்னை கண்டால்,
அழைத்து விடாதீர்கள்...!
ஒரு வேளை நாம் எதிர்பட்டுக்
கொண்டால், ஒரு புன்னகையில்
மென்மையாக கடந்துவிடுங்கள்..
அழுத்தமாக சொல்கிறேன்,
தெரிந்தோ, தெரியாமலோ
"எப்படி இருக்க?" என்று மட்டும்
கேட்டு விடாதீர்கள்..
அணை உடைய ஒரு அதிர்வு
போதுமல்லவா ?
காதலிக்கப்படுதல் வரம்..
காதலிக்கப்படுபவர்கள்
பாக்கியசாலிகள்..
காதலிக்கப்படுதல் வரம்..
காதலிக்கப்படுபவர்கள்
பாக்கியசாலிகள்..
எந்தக் கடவுளும் இருந்ததில்லை..
உனக்கான பிரார்த்தனைகள்
மட்டும் இருந்து கொண்டிருந்தன..
எந்தக் கடவுளும் இருந்ததில்லை..
உனக்கான பிரார்த்தனைகள்
மட்டும் இருந்து கொண்டிருந்தன..
கைகளில் ஏந்திக்கொண்டு
சுட்டுவிடாமல் பார்த்து பார்த்து
நடக்கிறான் ஒரு குழந்தை..
அம்மாவின் உதவியோடு
நேராய் நிறுத்தியபின்
கண்களை இறுக்கி
மூடிக் கொள்கிறான்...
எத்தனை எத்தனை
வேண்டுதல்கள் குழந்தைகளுக்கு..
நாளைக்கு ஸ்கூல்
லீவ் விடனும்..
அம்மா அடிக்க
கூடாது என்னைய...
சாக்லேட், பொம்மை,
சைக்கிள் என நீள்கிறது
கடவுள் பரிசளிக்க
வேண்டிய பட்டியல்..
கைகளில் ஏந்திக்கொண்டு
சுட்டுவிடாமல் பார்த்து பார்த்து
நடக்கிறான் ஒரு குழந்தை..
அம்மாவின் உதவியோடு
நேராய் நிறுத்தியபின்
கண்களை இறுக்கி
மூடிக் கொள்கிறான்...
எத்தனை எத்தனை
வேண்டுதல்கள் குழந்தைகளுக்கு..
நாளைக்கு ஸ்கூல்
லீவ் விடனும்..
அம்மா அடிக்க
கூடாது என்னைய...
சாக்லேட், பொம்மை,
சைக்கிள் என நீள்கிறது
கடவுள் பரிசளிக்க
வேண்டிய பட்டியல்..
பூவாளி பன்னீரும்
புதுச்சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காக தான்...
நெஞ்சோட சந்தம் புடிச்சாளே
நான் ஆடப் போறேன்..
உன்னால என்னை மறந்தேனே
ஆகாச வீரன்...
பூவாளி பன்னீரும்
புதுச்சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காக தான்...
நெஞ்சோட சந்தம் புடிச்சாளே
நான் ஆடப் போறேன்..
உன்னால என்னை மறந்தேனே
ஆகாச வீரன்...
கைகள், உன்னை மட்டும்
எழுத பழகிவிட்டது..
கொஞ்சம் எங்கேயாவது
பிசிறு தட்டினாலும் சரி
காகிதத்தோடு கவிதையையும்
கிழித்து எறிந்து விடுகிறேன்..
பூரணத்தின் பொருள்
அல்லவா நீ ....
கைகள், உன்னை மட்டும்
எழுத பழகிவிட்டது..
கொஞ்சம் எங்கேயாவது
பிசிறு தட்டினாலும் சரி
காகிதத்தோடு கவிதையையும்
கிழித்து எறிந்து விடுகிறேன்..
பூரணத்தின் பொருள்
அல்லவா நீ ....
கடந்திருக்கும்
இவ்விருட்சம்...
இன்று உன்
பூந்தென்றலுக்கு
வேர் அசைகிறது...
கடந்திருக்கும்
இவ்விருட்சம்...
இன்று உன்
பூந்தென்றலுக்கு
வேர் அசைகிறது...
I get remind of VIRAT's face.. I'm super proud and happy for witnessed his PRIME.
I get remind of VIRAT's face.. I'm super proud and happy for witnessed his PRIME.
அமருகிறது ஓர் பட்டாம்பூச்சி..
ரெக்கைகள் மட்டும்
அசைந்து கொண்டே இருக்கிறது..
பயம் போலும்..
பட்டென்று விரலுடிக்கில்
சிக்கி நசுங்கி விடுமென...
எனக்கும் பயம் தான்..
சட்டென்று பறந்துவிடுமோ என
இருந்துவிட்டு போகட்டும்
அதற்கு விருப்பமான
காலம் வரை..
பாரம் பல தாங்கிய தோள்கள்..
பட்டாம்பூச்சி தாங்காதா என்ன.?
அமருகிறது ஓர் பட்டாம்பூச்சி..
ரெக்கைகள் மட்டும்
அசைந்து கொண்டே இருக்கிறது..
பயம் போலும்..
பட்டென்று விரலுடிக்கில்
சிக்கி நசுங்கி விடுமென...
எனக்கும் பயம் தான்..
சட்டென்று பறந்துவிடுமோ என
இருந்துவிட்டு போகட்டும்
அதற்கு விருப்பமான
காலம் வரை..
பாரம் பல தாங்கிய தோள்கள்..
பட்டாம்பூச்சி தாங்காதா என்ன.?
I'm afraid of losing you..
In தமிழ் ~
கனவுதான் இதுவும், கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்..
I'm afraid of losing you..
In தமிழ் ~
கனவுதான் இதுவும், கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்..
இருக்கிறது ??
கொடுத்தல் தானே
அன்பின் அர்த்தம்..
இருக்கிறது ??
கொடுத்தல் தானே
அன்பின் அர்த்தம்..
இருக்கிறதா ?
ஒரு யுகம் உன்னுடன்
வாழ கண்ட கனவுகளை
அழிக்கும் அளவிற்கு
கொஞ்சம் பெரிய
அழிப்பான்...?
இருக்கிறதா ?
ஒரு யுகம் உன்னுடன்
வாழ கண்ட கனவுகளை
அழிக்கும் அளவிற்கு
கொஞ்சம் பெரிய
அழிப்பான்...?
மேகம் ஒன்றின் அடியில்,
உன் தேநீர் கோப்பையும்,
என் காப்பி கோப்பையும்
முட்டிக்கொள்ளும்,
முற்றத்து உரையாடல்
ஒன்றிற்குத்தான்
இவ்வுயிர் தப்பிப்பிழைத்து
நிற்கின்றது...
மேகம் ஒன்றின் அடியில்,
உன் தேநீர் கோப்பையும்,
என் காப்பி கோப்பையும்
முட்டிக்கொள்ளும்,
முற்றத்து உரையாடல்
ஒன்றிற்குத்தான்
இவ்வுயிர் தப்பிப்பிழைத்து
நிற்கின்றது...
அத்தியாவசியம் ஆகும் வரை,
யாருடைய கண்ணீருக்காவது
நீங்கள் கரங்கள் ஆகும் வரை,
ஒரு அன்பில் நீங்கள்
மூழ்கி தத்தளிக்கும் வரை,
பிறப்பிற்கான பொருளாக
ஒரு அன்பை, காதலை உணரும் வரை,
பறந்து கொண்டே இருங்கள்..
வானம் அத்தனை பெரியது..
அத்தியாவசியம் ஆகும் வரை,
யாருடைய கண்ணீருக்காவது
நீங்கள் கரங்கள் ஆகும் வரை,
ஒரு அன்பில் நீங்கள்
மூழ்கி தத்தளிக்கும் வரை,
பிறப்பிற்கான பொருளாக
ஒரு அன்பை, காதலை உணரும் வரை,
பறந்து கொண்டே இருங்கள்..
வானம் அத்தனை பெரியது..
இவ்வாழ்வும், இவ்வுழகும்..
நகர்த்தி கொண்டு செல்வது
நீயும், நின் நினைவும் மட்டும்தான்..
இவ்வாழ்வும், இவ்வுழகும்..
நகர்த்தி கொண்டு செல்வது
நீயும், நின் நினைவும் மட்டும்தான்..
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென உறுதிசெய்..
முகைமழை முகைமழை..
(mugaimazhai - Tourist family)
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென உறுதிசெய்..
முகைமழை முகைமழை..
(mugaimazhai - Tourist family)
சருகுகள் நொறுங்கும்
சத்தத்திற்கு பதறுகின்றன
பழுத்த இலைகள்...
சருகுகள் நொறுங்கும்
சத்தத்திற்கு பதறுகின்றன
பழுத்த இலைகள்...
கூரை சாய்ப்பின்
பிளவுகள் வழியே
சொட்டுகிறது மழை நீர்..
உச்சி வருடி,
முதுகுத்தண்டில் இறங்கும்
மழை நீரில்
அப்படியே அவள்
புன்னகையின் இதம்..
கூரை சாய்ப்பின்
பிளவுகள் வழியே
சொட்டுகிறது மழை நீர்..
உச்சி வருடி,
முதுகுத்தண்டில் இறங்கும்
மழை நீரில்
அப்படியே அவள்
புன்னகையின் இதம்..
நான் எழுதி, அழித்த
குறுஞ்செய்திகளை
நீ வாசித்திருந்தால்,
என்றோ என்னை வெறுத்திருப்பாய்..
யாரோவாக கூட
நாம் மாறியிருப்போம்..
ஆனால், நீ ஒன்றை
உணர்ந்திருப்பாய்..
யாதுமற்று நீ நிற்க
நேர்ந்தாலும்,
என் நேசக்கரம் உனக்காக
நீட்டப்பட்டே இருக்கும் என்று..
யாரோவென்று நாம்
ஆனாலும்,
உன்னை அதிகமாக
நேசித்தவன் நான்
மட்டும் என்று...
நான் எழுதி, அழித்த
குறுஞ்செய்திகளை
நீ வாசித்திருந்தால்,
என்றோ என்னை வெறுத்திருப்பாய்..
யாரோவாக கூட
நாம் மாறியிருப்போம்..
ஆனால், நீ ஒன்றை
உணர்ந்திருப்பாய்..
யாதுமற்று நீ நிற்க
நேர்ந்தாலும்,
என் நேசக்கரம் உனக்காக
நீட்டப்பட்டே இருக்கும் என்று..
யாரோவென்று நாம்
ஆனாலும்,
உன்னை அதிகமாக
நேசித்தவன் நான்
மட்டும் என்று...
அழகானவர்கள் என்று
யாரும் கிடையாது..
யாருடன் உரையாட,
யாருடன் உலாவ,
யாருடன் எஞ்சிய நொடிகளை
கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்க,
பிடித்திருக்கிறதோ,
அவர்கள் அழகானவர்கள்
அவர்கள் பூரணமானவர்கள்..
அழகானவர்கள் என்று
யாரும் கிடையாது..
யாருடன் உரையாட,
யாருடன் உலாவ,
யாருடன் எஞ்சிய நொடிகளை
கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்க,
பிடித்திருக்கிறதோ,
அவர்கள் அழகானவர்கள்
அவர்கள் பூரணமானவர்கள்..