தங்கத் தமிழ்
tamilvault.bsky.social
தங்கத் தமிழ்
@tamilvault.bsky.social
This page is dedicated to sharing the beauty of Tamil literature,history, interesting & important things in a humble effort to keep our language thriving and cherished.

எளிய தமிழில் எவரும் எதையும் கற்கும் வண்ணம் தமிழில் வளங்களை சேர்க்க வேண்டும்!

எத்துறையிலும் தமிழ் சிறக்க முயற்சிகளைச் செய்வோம்!
#விடுகதை

ஒருவனை துரத்தி துரத்தி விரட்டுவார்கள்; அதைக்கண்டு பொதுமக்கள் மகிழ்வார்கள்!

அது என்ன?

#தமிழ் #பிசி #புதிர் #tamil #puzzle
April 9, 2025 at 10:59 AM
#திருக்குறள் வெகுளாமை 309

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

பொருள்:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

One who never lets anger grow within will achieve whatever they aim for, without delay.

#தமிழ் #tamil #thirukkural
April 9, 2025 at 1:40 AM
#விடுகதை

வயிறு முட்ட சாப்பிட்டால் தான் நிமிர்ந்து நிற்பான்!

அவன் யார்?

#தமிழ் #பிசி #tamil #puzzle #TamilLanguage #language
April 5, 2025 at 1:06 PM
தமிழ் மொழி பற்றி சரியான புரிதலுக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த படைப்பு.
அறியப்படாத தமிழ் மொழி!
April 5, 2025 at 1:05 PM
#விடுகதை

நெருப்பில் வெந்தவனுக்கு நீண்ட ஆயுள்!

அவன் யார்?

#தமிழ் #பிசி #tamil #TamilPuzzle #puzzle
April 4, 2025 at 11:28 AM
#திருக்குறள் காலமரிதல் 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பொருள்:
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

A crow can defeat an owl during the day. So, one must choose the right time to overcome an enemy.

#தமிழ் #thirukkural #tamil #literature #language #sangam
April 4, 2025 at 4:01 AM
#திருக்குறள் செய்நன்றி அறிதல் 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

If one has never helped others, even giving the world and heaven in return won't repay a received favor.

#தமிழ் #thirukkural #tamil
April 3, 2025 at 3:58 AM
#விடுகதை

வெயிலில் மலரும்!
காற்றில் உலரும்!

அது என்ன?

#தமிழ் #பிசி #tamil #puzzle
April 2, 2025 at 11:23 AM
#திருக்குறள் - பெரியாரைத் துணைக்கோடல் 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள்:
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

Breaking ties with good people brings greater harm than making many enemies.

#தமிழ் #thirukkural #tamil
April 1, 2025 at 11:29 PM
#திரிகடுகம் 38

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய
பல் பொருள் வெஃகுஞ் சிறுமையும், - இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை.

பொருள்:
தன்னைத் தானே வியந்து போற்றுதலும், அடக்கமில்லாமல் சினம் கொள்ளுதலும், பலவகைப் பொருட்களை விரும்புகின்ற சிறுமையும், இம்மூன்றும் செல்வத்தை அழிக்கும் படைகளாகும்.

#தமிழ் #tamil #thirikadugam
April 1, 2025 at 8:10 AM
#திருக்குறள் பயனில_சொல்லாமை 200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

பொருள்:
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

One should speak only words that are useful and meaningful, and avoid speaking words that have no purpose.

#தமிழ் #இலக்கியம் #tamil #literature #language #மொழி #speak
March 31, 2025 at 4:44 AM
#விடுகதை

நடந்தவன் நின்றான். கத்தியால் தலையை சீவினேன்.

மறுபடி நடந்தான்.
அவன் யார்?

#தமிழ் #பிசி #TamilPuzzle #tamil #புதிர்
March 30, 2025 at 9:29 AM
#திருக்குறள் கல்வி 397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம், எல்லா ஊரும் சொந்த ஊராம். அப்படியிருக்க, ஒருவன் சாகும் வரைக்கும் கற்காமல் காலம் கழிப்பது ஏன்?

For a learned person, every country feels like their own, and every place feels like home. If that is the case, why waste a lifetime without learning?

#தமிழ்
March 29, 2025 at 12:59 PM
#திருக்குறள் மானம் 967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

பொருள்:
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்

It is far better to die with dignity than to live by following someone who does not respect you.

#தமிழ் #thirukkural #tamil #literature #language #ancient
March 28, 2025 at 3:19 AM
#விடுகதை

தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்!

அது என்ன?

#தமிழ் #பிசி #tamil #puzzle
March 27, 2025 at 2:47 AM
#திருக்குறள் புறங்கூறாமை 181

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.

#தமிழ் #thirukkural #tamil
March 27, 2025 at 2:46 AM
#விடுகதை

முற்றத்தில் நடப்பான் மூலையில் உறங்குவான்!

அது என்ன?

#தமிழ் #பிசி #இலக்கியம் #tamil #puzzle
March 26, 2025 at 3:57 AM
#திருக்குறள் - #நட்பு 781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

பொருள்:
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை

There is no greater act than building friendships, and nothing ensures safety better than true friendship.

#தமிழ் #tamil #thirukkural
March 25, 2025 at 11:43 PM
Reposted by தங்கத் தமிழ்
நன்றி - அறிவியல் பலகை இதழ்
March 15, 2025 at 2:21 PM
#திருக்குறள் பண்புடைமை 995

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு

பொருள்:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்

Even as a joke, insulting someone can cause harm. Wise people remain respectful, even towards their enemies

#தமிழ் #thirukkural #tamil
March 24, 2025 at 3:41 PM
#திருக்குறள் - பகைமாட்சி 864

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

பொருள்:
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்

Those who cannot control their anger and mind can be easily defeated by anyone, anytime, anywhere

#தமிழ் #tamil #thirukkural #anger #MentalHealth
March 23, 2025 at 7:39 AM
#விடுகதை

காவலாளி வீட்டைக் காக்கும்போது, அவனது கூட்டாளி ஊர் சுற்றிக் கொண்டிருப்பான்.

அவர்கள் யார்?

#தமிழ் #பிசி #tamil #puzzle #TamilLanguage
March 23, 2025 at 7:35 AM
#நல்வழி 11

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

#ஒளவையார்
March 20, 2025 at 4:19 AM
#திருக்குறள் குடிமை 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்

The quality of the land is shown by the crops it produces. Similarly, the nature of a family is reflected in the words spoken by its members

#தமிழ் #thirukkural #tamil
March 19, 2025 at 3:42 PM